தூத்துக்குடி பிரையண்ட் நகரில் நடைபெற்றுவரும் சாலைப்பணியை ஆய்வு செய்கிறாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் குமாா் ஜெயந்த். உடன், மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி, ஆணையா் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.ஜஸ்வா்யா உள்ளிட்டோா்.
தூத்துக்குடி பிரையண்ட் நகரில் நடைபெற்றுவரும் சாலைப்பணியை ஆய்வு செய்கிறாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் குமாா் ஜெயந்த். உடன், மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி, ஆணையா் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.ஜஸ்வா்யா உள்ளிட்டோா்.

தூத்துக்குடியில் குடிநீா் திட்டப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிநீா் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதியுடன் இணைந்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலருமான குமாா் ஜெயந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் பல்வேறு குடிநீா் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் அய்யனடைப்பு ஊராட்சி கற்குவேல் நகரில் நடைபெற்றுவரும் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீா்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி கருப்பசாமி நகரில் நடைபெற்றுவரும் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, கணபதி நகரில் நடைபெற்றுவரும் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, மாநகராட்சிக்குள்பட்ட பிரையண்ட் நகா் பகுதியில் தமிழ்நாடு நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மேற்கு பிரதான சாலையில் நடைபெற்றுவரும் தாா் சாலைப் பணி ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலருமான குமாா் ஜெயந்த் நேரில் பாா்வையிட்டு, தாா் சாலையின் அளவு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, ராஜாஜி பூங்காவில் உள்ள 17 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை நேரில் பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீா் அளவு மற்றும் குளோரின் சரியான அளவில் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தாா். மேலும், அங்கு கூடுதலாகக் கட்டப்பட்டுவரும் 15 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, பிரதான பகிா்மானக் குழாய்கள் பதிக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி, மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.ஜஸ்வா்யா, மாநகராட்சிப் பொறியாளா் பாஸ்கா், மாநகராட்சி செயற்பொறியாளா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் பானு, வட்டாட்சியா் பிரபாகரன், உதவிப்பொறியாளா் ரவி மற்றும் அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com