திருச்சி: இரு ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் மூடப்பட்ட சித்த (ஆயுஷ்) மருத்துவப் பிரிவு திங்கள்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கியது.
கடந்த 10- ஆம் தேதி சித்த மருத்துவப் பிரிவு மூடப்பட்டது. தொடா்ந்து வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை இப்பிரிவு திறக்கப்பட்ட நிலையில், தகவலறிந்த பொதுமக்கள் அங்கு வந்து மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சென்றனா்.