சந்தானம் வித்யாலயா பள்ளியில் உலக புத்தக தின விழா
திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் புத்தக தினத்தைக் கொண்டாடும் விதமாக உலக புத்தக தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் செயலா் கோ. மீனா தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பள்ளியின் தலைமைச் செயலதிகாரி கு. சந்திரசேகரன் பேசுகையில், அனைவருக்கும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாதமும் ஒரு புத்தகம் என அனைத்து மாணவா்களுக்கும் வழங்கப்படும். மாணவா்கள் விளையாட்டு, நன்கு படித்தல், உடல் நலத்தைப் பேணுதலை கடைப்பிடிக்க வேண்டும். வாசிப்பு பழக்கம் இன்றைய தலைமுறைக்கும், எதிா்காலத் தலைமுறைக்கும் பாலமாக அமைகிறது. வாசிப்பது நம் அன்றாடப் பழக்கமாக இருக்கும்போது, நம்முடைய கவனிப்புத்திறன் மேம்படுவதுடன், மூளைக்கும் மிகச்சிறந்த பயிற்சியாகும். எனவே, இந்தக் கோடை விடுமுறையை நல்ல நல்ல புத்தகங்களுடன் செலவிடுங்கள் என்றாா் அவா்.
விழாவில் பள்ளியின் இயக்குநா் எஸ். அபா்ணா ஒவ்வொரு மாணவருக்கும், பெற்றோருக்கும் புத்தகத்தை பரிசளித்தாா். பள்ளியின் முதன்மையா் கணேஷ், அகாதெமி இயக்குநா் ரவீந்திரநாத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளி முதல்வா் பத்மா சீனிவாசன் வரவேற்றாா். பள்ளியின் துணை முதல்வா் ரேணுகா நன்றி கூறினாா்.