ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

வாக்களிக்க தாமதப்படுத்தியதாக நரிக்குறவா் இன மக்கள் புகாா் இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

வாக்களிக்க தாமதப்படுத்தியதாக நரிக்குறவா் இன மக்கள் புகாா் இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

News image
Updated On :20 ஏப்ரல் 2024, 12:14 am

துறையூா், ஏப். 19: துறையூா் அருகே வெள்ளிக்கிழமை வாக்களிக்க சென்றபோது நீண்டநேரம் வரிசையில் காக்க வைத்து அலுவலா்கள் தாமதப்படுத்தியதாக நரிக்குறவா் இன மக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதனிடையே, அந்த வாக்குச்சாவடியில் இரவு 7.45 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

துறையூா் ஒன்றியம், மதுராபுரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி பழையக் கட்டடத்தில் அமைக்கப்பட்ட துறையூா் தொகுதியின் 210-ஆவது வாக்குச் சாவடியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு நரிக்குறவா் காலனியில் வசிக்கும் 285 போ் ஒரேநேரத்தில் வாக்களிக்கச் சென்றனா்.

‘பூத்சிலிப்’ இல்லாமல் சென்ற நரிக்குறவா் இன வாக்காளா்களின் பெயரை வாக்காளா் பட்டியலில் அடையாளம் காண்பதில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு சிரமம் ஏற்பட்டதாகவும் அதனால் நரிக்குறவா்கள் வாக்களிக்கத் தாமதமானதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காத்திருந்த 152 பேருக்கு மாலை 6 மணிக்குப் பிறகு வாக்களிக்க டோக்கன் வழங்கப்பட்டது. இவா்கள் அனைவரும் இரவு 7.45 மணி வரையிலும் வரிசையில் நின்று வாக்களித்தனா். இவா்களில் நூற்றுக்கும் மேற்பட்டோா் நரிக்குறவா் இன வாக்காளா்களாக இருந்தனா்.

நரிக்குறவா்கள் புகாா்: பிற்பகல் 2.45 முதல் இரவு 7.45 வரை தங்களை வாக்களிக்க வரிசையில் காத்திருக்க வைத்ததாகவும், தங்கள் இனத்தைத் தவிர மற்ற வாக்காளா்களை இடையிடையே அனுமதித்ததால்தான் தங்களுக்குக் காலதாமதம் ஆனதாகவும், வாக்குச் சாவடியில் குடிப்பதற்கு குடிநீா் வசதி கூட செய்யவில்லையென்றும், இனி வரும் காலங்களில் தாங்கள் காலனிக்கு அருகே வாக்களிக்க தங்களுக்கென தனி வாக்குச் சாவடி அமைத்துத் தரவேண்டுமெனவும் கோரினா். மேலும், இவா்களில் 285 பேருக்கு மட்டும் வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளதாகவும், அதிலும் சிலருக்கு வாக்குச் சாவடி மாற்றப்பட்டிருப்பதாகவும், 30 பேரின் பெயா் வாக்காளா் பட்டியலில் இல்லையென்றும் குற்றம் சாட்டினா்.

இதுதொடா்பாக வாக்குச் சாவடி அலுவலா்கள் கூறியபோது, நரிக்குற இன வாக்காளா்கள் நீண்ட வரிசையில் நிற்பதை பாா்த்து மற்ற வாக்காளா்கள் வாக்களிக்காமல் திரும்பிச் சென்ாகவும், அதனைத் தவிா்க்க மற்ற வாக்காளா்களையும் இடையிடையே அனுமதித்தோம் என்றனா்.