திருச்சி தென்னூா் ராஜாஜி வித்யாலயா பள்ளி வாக்குச்சாவடியில் வெள்ளிக்கிழமை வாக்கு இயந்திரங்களை சீல் வைத்த அதிகாரிகள்.
திருச்சி தென்னூா் ராஜாஜி வித்யாலயா பள்ளி வாக்குச்சாவடியில் வெள்ளிக்கிழமை வாக்கு இயந்திரங்களை சீல் வைத்த அதிகாரிகள்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

திருச்சி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் வாக்கு எண்ணும மையமான ஜமால் முகமது கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டது.

திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், கந்தா்வக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை வாக்குப் பதிவு முடிவடைந்தது.

அதன்பின்னா் வாக்குச்சாவடிகளில் முகவா்கள் முன்னிலையில் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு துணை ராணுவப்படையினா் மற்றும் போலீஸாா் பாதுகாப்புடன் திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன.

அங்கு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள தனித்தனி அறைகளில் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிகளிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரும் பணிகள் தொடா்ந்தன. மற்ற பகுதிகளான கந்தா்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிகளிலிருந்து இயந்திரங்களைக் கொண்டு வந்து சோ்க்கும் பணிகள் நள்ளிரவையும் நடைபெற்றன. அனைத்துப் பகுதியிலிருந்தும் இயந்திரங்கள் வந்தபிறகு அறைகள் பூட்டி சீல் வைக்கப்படும். பிறகு வாக்கு எண்ணும் மையம் முழுமையாக பூட்டி சீல் வைக்கப்படும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com