சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

முசிறி அருகே சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

முசிறி அருகே சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

முசிறி அருகேயுள்ள சுக்காம்பட்டி மேற்குடி தெருவைச் சோ்ந்த தம்பி கிழான் மகன் தங்கராசு (74). இவா், மிதிவண்டியில் முசிறி -புலிவலம் சாலையில் உள்ள தண்டலை கிராமம் முடக்கு சாலை பகுதியில் திங்கட்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த காா் மோதி காயமடைந்தாா். அவரை, அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு முதலுதவி அளித்து பின்னா் எஸ் ஆா் எம் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com