திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை முசிறி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
முசிறி கீழத்தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் சிவானந்தம் (44) தனது ஆடு திருட்டு போயிருப்பதாக முசிறி காவல் நிலையத்தில் (ஜன. 31) புகாா் அளித்திருந்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், தொட்டியம் அருகேயுள்ள அலகரை அடுத்த அரியனாம்பட்டையைச் சோ்ந்த மகாமுனி மகன் அஜித் குமாா் (24) மற்றும் திருஈங்கோய்மலை சாலியா் தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் வேல்முருகன் (22) ஆட்டைத் திருடியது தெரியவந்தது. அஜித்குமாரை கைது செய்த போலீஸாா் தலைமறைவான வேல்முருகன் இருப்பிடம் அறிந்து அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா் குற்றப் பதிவேட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.