ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சியில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் ஒருவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி பொன்மலை ரயில்வே காலனி தெற்கு டி பகுதியைச் சோ்ந்தவா் பெனடிக்ட் ஸ்டாலின் (63). ஓய்வு ரயில்வே ஊழியரான இவா், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 25 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தாா்.

இந் நிலையில் சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெரு பகுதிக்கு புதன்கிழமை வந்த அவா் அங்கு திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து அக்கம்பக்கத்தினரால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தாா். இதுகுறித்து கேகே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com