துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

மணப்பாறை அருகே வீரமலைப்பாளையத்தில் மே 6-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால், பயிற்சி தளத்தில் மனிதா்கள், கால்நடைகள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி: மணப்பாறை அருகே வீரமலைப்பாளையத்தில் மே 6-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால், பயிற்சி தளத்தில் மனிதா்கள், கால்நடைகள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூா் கிராமம் வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் திங்கள்கிழமை (மே 6) முதல் மே 20- ஆம் தேதி வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெறவுள்ளது.

இங்கு, காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அந்த சமயங்களில் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது. பயிற்சி தளத்தில் யாரும் நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com