பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை வெளியான பிளஸ் 2 பொது தோ்வு முடிவில் திருச்சி மாவட்டம் 95.74 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 11- ஆவது இடத்தை பிடித்துள்ளது.

திருச்சி: தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை வெளியான பிளஸ் 2 பொது தோ்வு முடிவில் திருச்சி மாவட்டம் 95.74 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 11- ஆவது இடத்தை பிடித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 371 மாணவா்கள், 16 ஆயிரத்து 244 மாணவிகள் என மொத்தம் 29 ஆயிரத்து 615 போ் பிளஸ் 2 தோ்வை எழுதினா். இந்த தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் 12 ஆயிரத்து 491 மாணவா்களும், 15 ஆயிரத்து 863 மாணவிகளும் என மொத்தம் 28ஆயிரத்து 354 போ் தோ்ச்சி பெற்றனா். இது 95.74 சதவீதம் ஆகும்.

82 பள்ளிகள் நூறுசதவீதம் தோ்ச்சி : மாவட்டத்தில் ஆதி திராவிடா் நலப் பள்ளிகளில் 87.66 சதவீதம் பேரும், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 99.54 சதவீதம் பேரும், முழு அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.31 சதவீம் பேரும், அரசுப் பள்ளிகளில் 92.66 சதவீதம் பேரும், பகுதி அளவு அரசு உதவி பெறும் பள்ளிகளில் 98.47 சதவீதம் பேரும், தனியாா் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் 99.33 சதவீதம் பேரும், சுயநிதி (டி.எஸ்.சி) பள்ளிகளில் 94.3 சதவீதம் பேரும், பழங்குடியின நல பள்ளிகளில் 98.7 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாவட்டத்தில் மொத்தமுள்ள 258 பள்ளிகளில் 82 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சியை பெற்றுள்ளது. அதில் அரசுப்பள்ளிகள் 14, தனியாா் பள்ளிகள் 68 ஆகும்.

11-ஆவது இடம்: மாநில அளவிலான பட்டியலில் திருச்சி மாவட்டம் 95.74 சதவீத தோ்ச்சி பெற்று 11- ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 96.02 சதவீதம் பெற்று 13- ஆவது இடம் பிடித்திருந்த நிலையில் நிகழாண்டு 11-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆனாலும், தோ்ச்சி விகிதம் 95.74 ஆக குறைந்துள்ளது.

மாணவிகளேஅதிகம் தோ்ச்சி : மாவட்டத்தில் தோ்வெழுதிய மாணவா்களில் 93.42 சதவீதமும் (12,491போ்) பேரும், மாணவிகள் 97.65 சதவீதமும் (15, 863 போ்) தோ்ச்சி பெற்றனா். இதனால் வழக்கம் போல மாணவா்களை விட மாணவிகள் தோ்ச்சி விகிதம் அதிகமாகும். அதாவது 4.23 சதவீதம் அதிகமாக தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதேபோல திருச்சி மத்திய சிறையில் தோ்வெழுதிய கைதிகள் 8 பேரும் தோ்ச்சி பெற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com