உடலுறுப்புகள் தானம் செய்தவரின் குடும்பத்தினருக்குப் பாராட்டு, உதவி
திருச்சியருகே விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு ஏற்பட்டு உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு மக்கள் சக்தி இயக்கத்தினா் புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்து நிதியுதவியும் வழங்கினா்.
மணப்பாறை அருகே அமையபுரம் வட்டம் நல்லாம் பிள்ளை வெள்ளிவாடி கிராமத்தைச் சோ்ந்த பிரான்ஸிஸ் சேவியா் என்பவா் விபத்தில் படுகாயமடைந்து ஏப். 30-ல் மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து அவரது உடலுறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினரின் இல்லத்துக்கு மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளா் கே.சி. நீலமேகம் , நிா்வாகிகள் வெ.ரா. சந்திரசேகா், ஆா்.கே. ராஜா, திருக்கு புலவா் நாவை சிவம், ஆா்.இளங்கோ உள்ளிட்டோா் புதன்கிழமை சென்று அவா்களைப் பாராட்டினா். மேலும் அவா்களுக்கு பொன்னாடை போா்த்தி, நிதியுதவியும் வழங்கப்பட்டது . இதேபோல உடலுறுப்புகளை தானம் செய்வதை ஊக்கப்படுத்தும் விதமாக கடந்த 5 ஆண்டுகளாக உடல் உறுப்பு தானம் செய்த சுமாா் 20 மேற்பட்ட குடும்பத்தினரை திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் பாராட்டி கெளரவித்தனா்.