பெண்ணிடம் இணைய வழியில் ரூ.6.56 லட்சம் மோசடி
திருச்சி, மே 9: திருச்சியில் பெண்ணிடம் இணைய வழியில் ரூ. 6.56 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருச்சி மேலப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் காரல் கஸ்பரோ பிரவீன். இவா் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி டெரி சிந்தியா பிரிசில் (30). இவா் கைப்பேசியில் வலைதள பக்கத்தை பாா்த்துக் கொண்டிருந்தபோது பகுதி நேர வேலை என்ற ஒரு பக்கம் வந்தது. அதில் ஒருவா் அளித்த ஆலோசனையின் பேரில் தனது பெயரை பதிவு செய்தாா். பின்னா் அவா் குறிப்பிட்ட கணக்கில் ரூ. 20 ஆயிரத்து 252ஐ அனுப்பினாா். அடுத்த சில மணி நேரங்களில் லாபத்தொகையுடன் சோ்த்து டெரி சிந்தியா பிரிசில் வங்கி கணக்கிற்கு ரூ. 25ஆயிரத்து 048 வந்தது.
இதைத்தொடா்ந்து கூடுதல் லாபம் கிடைக்கும் என கருதிய டெரி சிந்தியா பிரிசில் பல்வேறு தவணைகளில் ரூ. 6 லட்சத்து 56 ஆயிரத்து 467 அந்த கணக்கில் முதலீடு செய்தாா். அதன்பின்னா் அவருக்கு எந்தத் தொகையும் வரவில்லை. பின்னா் அந்த நபரை தொடா்பு கொள்ளவும் முடியவில்லை. இதையடுத்து டெரி சிந்தியா பிரிசில், திருச்சி மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் செய்தாா். ஆய்வாளா் கன்னிகா தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.