திருச்சியில் 95.23% தேர்ச்சி: மாநில அளவில் 5ம் இடம்!

திருச்சியில் 95.23 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது.
திருச்சியில் 95.23% தேர்ச்சி: மாநில அளவில் 5ம் இடம்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் திருச்சியில் 95.23 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது. திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் குறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்திருப்பது:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருச்சி மாவட்டத்தில் 16,648 மாணவர்களும், 16,528 மாணவிகளும் என மொத்தம் 33, 176 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார். இதில் 15,500 மாணவர்களும், 16,94 மாணவிகளும் என மொத்தம் 31,594 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் 95.23 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாநில அளவில் தரவரிசை பட்டியலில் திருச்சி மாவட்டம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியதில் மாணவர்கள் 91.88 சதவீதமும், மாணவிகள் 95.87சதவீதமும், என மொத்தம் 93.85 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். சென்ற ஆண்டு 94.28 சதவீதம் பெற்று 8ஆம்இடத்தில் இருந்த திருச்சி மாவட்டம், இந்த ஆண்டு 95.23 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 5ஆம் இடத்தை பிடித்துள்ளது.

தமிழ்ப் பாடத்தில் 98.59 சதவீதமும், ஆங்கில பாடப்பிரிவில் 99.44 சதவீதமும், கணித பாடப்பிரிவில் 98.39 சதவீதமும், அறிவியல் பாடப் பிரிவில் 98.17 சதவீதமும், சமூக அறிவியல் பாடப் பிரிவில் 97.63 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

100சதவீதம் தேர்ச்சி

திருச்சி மாவட்டத்தில் 55 அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிட நலப் பள்ளிகள் 10, பழங்குடியினர் நலப் பள்ளிகள் 1, நிதி உதவி பெறும் பள்ளிகள் 8, பகுதி நிதி உதவி பெறும் பள்ளிகள் 12, ஆங்கிலோ, இந்தியன் பள்ளிகள் 1, சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் 73 என மொத்தம் 446 பள்ளிகளில் 160 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com