அரியலூர் மாவட்டம், திருமானூரில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வளமையம் சார்பில் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து குடியிருப்புகளிலும் 2018-19 ஆம் ஆண்டில் 6 முதல் 14 வயதுடைய பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இந்தப் பணியினை வட்டார வளமைய மேற்பார்வையாளர் அமுதா தொடங்கி வைத்தார்.
இப்பணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபட்டு கணக்கெடுக்க உள்ளனர்.