அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகேயுள்ள வாணத்திரையான்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் குணசேகரன்(63). விவசாயி. செவ்வாய்க்கிழமை இவரும், இவரது உறவினர்களான கடம்பூரை சேர்ந்த காசிநாதன் மகன் ரவி(45), குடிகாட்டை சேர்ந்த வீராசாமி மகன் கலியபெருமாள் ஆகிய 3 பேரும் தத்தனூரில் இருந்து ஒரே இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, மூர்த்தியான் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குணசேகரன், ரவி, கலியபெருமாள் ஆகிய 3 பேரும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீஸார் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான தேனி மாவட்டம் கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வனராஜ் மகன் பிரசாத்(25) என்பவரைக் கைது செய்தனர்.