அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கோட்டாட்சியரகத்தில் சாலைப் பாதுகாப்பு, முதலுதவிப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
உடையார்பாளையம் கோட்டாட்சியர் ப. டினாகுமாரி தலைமை வகித்தார். முகாமில் சென்னை அலர்ட் சேரிடபிள் ட்ரஸ்ட்டைச் சேர்ந்த கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்று விபத்து, ஆபத்து காலங்களில் பாதிக்கப்படுவோருக்கு அளிக்க வேண்டிய முதலுதவி குறித்து பயிற்சியளித்தனர்.
ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் சந்திரகலா, காவல் உதவி ஆய்வாளர்கள் தினேஷ்குமார், வினோத்கண்ணன், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.