அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கீழஎசனை கிராமம் காலனித் தெருவைச் சேர்ந்தவர் செல்லக்கண்ணு(51).விவசாய கூலித்தொழிலாளி. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது மகள் சுவீதாவை(19) கீழகாவட்டாங்குறிச்சியைச் சேர்ந்த ராஜ்குமார் பெண் கேட்டு வந்துள்ளார்.
அதற்கு செல்லக்கண்ணு சுவீதா படித்து வருவதால் தற்போது திருமணம் செய்து கொடுக்க முடியாது என்றாராம்.
இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி கல்லூரிக்குச் சென்ற சுவிதா வீடு திரும்பவில்லை. விசாரணையில், சுவீதா தன்னைப் பெண் கேட்டு வந்த ராஜ்குமாருடன் ஓடிவிட்டதாகத் தெரியவந்தது. இதனால் விரக்தியில் இருந்த சுவீதாவின் அண்ணன் ஜீவா கடந்த 6 ஆம் தேதி விஷம் குடித்தார். இதையடுத்து, ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். கீழப்பழுவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.