தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணுவைத் தாக்கிய பாஜக பெண் நிர்வாகியை கைது செய்யக்கோரி, அரியலூர் அண்ணா சிலை அருகே அனைத்து விவசாய சங்கக் கூட்டு இயக்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி நடைப்பயண விழிப்புணர்வு பேரணி சென்ற தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு, திருச்செந்தூரில் பாஜக நிர்வாகி நெல்லையம்மாளால் தாக்கப்பட்டார். இதைக் கண்டித்து அரியலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து விவசாய கூட்டு இயக்கத்தின் தலைவரும், தேசிய தென்னிந்திய இணைப்பு விவசாய சங்க பொதுச்செயலாளருமான எஸ்.எம். பாண்டியன் தலைமை வகித்தார்.