அரியலூர்
பெண்ணை தாக்கிய நால்வர் மீது வழக்கு
ஜயங்கொண்டம் அருகே பெண்ணைத் தாக்கிய 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
ஜயங்கொண்டம் அருகே பெண்ணைத் தாக்கிய 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் தா. பழூரை அடுத்த கோடாலி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா (32), இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அருளுக்கும் இடப் பிரச்னையால் முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் திங்கள்கிழமை அருள் மற்றும் ஜெய்சங்கர், கமல், புகழேந்தி ஆகியோர் சேர்ந்து சந்திராவை திட்டி, கட்டையால் தாக்கினர்.
இதில் காயமடைந்த சந்திரா ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
இதுகுறித்து அவர் தா.பழூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.