அரியலூர் மாவட்ட தகவலியல் மையம் சார்பில் புதுப்பிக்கப்பட்ட நவீன தகவல் தொழில்நுட்பத்தில் மாவட்ட வலைதளம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் மு.விஜயலட்சுமி கலந்து கொண்டு புதிய வலைதளத்தைத் தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது: புதிய தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு இணையதள பாதுகாப்பு அம்சங்களுடன் அரியலூர் மாவட்ட வலைதளம் ட்ற்ற்ல்ள்://ஹழ்ண்ஹ்ஹப்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற முகவரியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் தங்கள் ஸ்மார்ட் போன்,டேப்லட், லேப் டாப், கணினி உள்ளிட்ட அனைத்து தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் கொண்டு எளிதாக அறிந்து கொள்ள முடியும். இந்த வலைதளம் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் வலைதள (எஐஎர- என்ண்க்ங்ப்ண்ய்ங்ள் ஊர்ழ் ஐய்க்ண்ஹய் எர்ஸ்ங்ழ்ய்ம்ங்ய்ற் ரங்க்ஷள்ண்ற்ங்) விதிமுறைகளை 100 சதவீதம் முழுமையாகப் பின்பற்றி வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கே.லோகேஷ்வரி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பாலாஜி, மாவட்ட தகவலியல் அலுவலர் எஸ்.ஜான் ரிட்டோ, கூடுதல் தகவலியல் அலுவலர் கே.டேவிட் ஜோசப் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.