அரியலூர் மாவட்டம் கூத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை ( நவ. 12) நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அரியலூர் மேற்கு பகுதி, அல்லிநகரம், பி.ஆர்.நல்லூர், கூத்தூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், வெண்மணி, வேட்டக்குடி, காடூர் நமங்குணம், புதுவேட்டக்குடி, கோயில்பாளையம், கீழப்பெரம்பலூர், துங்கபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் எம்.செல்லப்பாங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.