அரியலூர்
உடையார்பாளையம் அருகே மது விற்றவர் கைது
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மது பானம் விற்றவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மது பானம் விற்றவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
உடையார்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, நாச்சியார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா (32) தனது வீட்டின் பின்புறம் மறைத்து வைத்து மதுபானப் பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.