அரியலூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வழக்கில் இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஜயங்கொண்டம்-விருத்தாசலம் பிரதான சாலையில் உள்ளது சென்னீஸ்வரர் மற்றும் செல்லியம்மன் கோயில். இக்கோயிலின் உண்டியல் திங்கள்கிழமை உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. புகாரின் பேரில் ஜயங்கொண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் இந்த திருட்டில் தொடர்புடைய தில்மலங்கன் குடியிருப்பு இருளர் தெருவைச் சேர்ந்த குமார் மகன் மாரியப்பனை (19) கைது செய்து விசாரிக்கின்றனர்.