கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், 21 மாத ஓய்வூதிய, குடும்ப ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதிய, குடும்ப ஒய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். மாதந்தோறும் மருத்துவப்படி ரூ.1,000 வழங்க வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்க மாவட்டத் தலைவர் இரா. முருகேசன் தலைமை வகித்தார்.