கஜா புயல்: ரூ..2 லட்சம் நிவாரண உதவி வழங்கிய எம்.ஆர். கல்வி நிறுவனங்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில்,  அரியலூர் மாவட்டம்,  தத்தனூரிலுள்ள மீனாட்சி ராமசாமி 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில்,  அரியலூர் மாவட்டம்,  தத்தனூரிலுள்ள மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்கள் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதியிடம் எம்.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரகுநாதன், மீனாட்சி ராமசாமி பள்ளித் தாளாளர் பாலசுப்பிரமணியன், கல்லூரி இயக்குநர் ராஜமாணிக்கம்,  இணைச் செயலர் கமல்பாபு  ஆகியோர் நிவாரணப் பொருள்களை வழங்கினார்.வேட்டிகள்,துண்டுகள், சட்டைகள், நைட்டிகள், புடவைகள், கைலிகள், போர்வைகள், கொசுவலைகள், தைலம் மற்றும் மருத்து மாத்திரைகள்,சோப்பு, உணவுப் பொருள்கள் என ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com