அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாமிதுரை தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மேலகோவிந்த புத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்த பூங்கொடி(35) என்பவர் தனது பெட்டிக்கடையில் மதுபான பாட்டில்களைப் பதுக்கி விற்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிந்து பூங்கொடியைக் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.