விக்கிரங்கமங்கலம் அருகே வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது புதன்கிழமை வழக்குப் பதியப்பட்டது.
விக்கிரமங்கலம் அருகேயுள்ள அம்பலவர்கட்டளை இந்திராகாந்தி நகரைச் சேர்ந்த பெரியசாமி மனைவி அஞ்சலை(27). அதேபகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள்(45). இவர்கள் இருவருக்கும் சொத்து பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அஞ்சலை வீட்டுக்கு வந்த மாரியம்மாள், அவரது மகன்கள் மணி(22), ஆனந்தன்(20), வேலன்(18) ஆகியோர் சேர்ந்து அஞ்சலையை தகாத வார்த்தையால் திட்டி வீட்டின் ஓடுகளை சேதப்படுத்திச் சென்றனர். இதுகுறித்து அஞ்சலை அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸார் 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.