திருமானூர் ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கு

அரியலூர் மாவட்டம், திருமானூர் பரிசல் துறை தெருவில் உள்ள வரம் தரும் அஞ்சலி ஆஞ்சநேயர் கோயில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், திருமானூர் பரிசல் துறை தெருவில் உள்ள வரம் தரும் அஞ்சலி ஆஞ்சநேயர் கோயில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி பூஜை என நான்கு கால பூஜை நடத்தப்பட்டு,வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கடம் புறப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க  கோயில் கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது.  
பின்னர், மூலவருக்கு தீபாராதனை காண்பித்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com