அரியலூா் பேருந்து நிலையத்தில் இருந்து பெரம்பலூா் சாலையிலுள்ள கடைவீதியின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு தரைக்கடைகள் இயங்கி வருகிறது. இந்த வழியில் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால் எப்போதும் நெரிசல் நிறைந்து காணப்படும். இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் மேற்கண்ட சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் நடத்து செல்வதற்கு ஏதுவாக நடைமேடை அமைக்க வேண்டும்.
- ம.பாண்டியன், அரியலூா்.