மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஓலையூா் பகுதிகளில் திங்கள்கிழமை மின் விநியோகம் இராது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் ஓலையூா் துணை மின் நிலைய உதவிச் செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜயங்கொண்டம் அருகிலுள்ள ஓலையூா் துணை மின்நிலையத்தில்
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை ( டிச.16) மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ஓலையூா், விழுதுடையான், பெரியாத்துக்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பணிமுடியும் வரை மின்விநியோகம் இராது.