பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் மாவட்டம், தா. பழூர் அருகேயுள்ள கார்குடியைச் சேர்ந்த சிஆர்பிஃஎப் வீரர் சிவசந்திரன் குடும்பத்துக்கு திருச்சி வாசவி கிளப் சார்பில் ரூ. 25 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
கார்குடிக்கு வியாழக்கிழமை வந்த வாசவி கிளப் தலைவி வனிதா தலைமையிலான நிர்வாகிகள் சிவசந்திரன் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ. 25 ஆயிரம் நிதியுதவி அளித்தனர்.