அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியம், இதர 16 வகை தொழிலாளர்கள் நலவாரியங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சமூகப் பாதுகாப்பு தொழிலாளர் உதவி ஆணையர் முகமதுயூசுப் தலைமை வகித்தார். அதன் பணியாளர்கள் செந்தில்வேலன், பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.