பேராசிரியர் வீட்டில் நகைத்திருட்டு

அரியலூர் அருகே பேராசிரியர் வீட்டில்  5 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

அரியலூர் அருகே பேராசிரியர் வீட்டில்  5 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், உத்தமசோழகன் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர், அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரிலுள்ள அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.  அரியலூர் மின் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந் நிலையில், பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக, சனிக்கிழமைகுடும்பத்துடன் உத்தமசோழகன் கிராமத்துக்கு அருண்குமார் சென்றுவிட்டார். இந்நிலையில்,ஞாயிற்றுக்கிழமை இரவு இவரது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்ட வீட்டின் உரிமையாளர் மகாராஜன்,இது குறித்து அருண்குமாரிடம் தெரிவித்தார்.  
இதையடுத்து அருண்குமார் உடனடியாக வீட்டுக்கு வந்து பாரர்த்த போது,அவரது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு,அதில் இருந்த 5 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் அரியலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com