மேல்நிலைப் பொதுத் தேர்வை எழுதுவதற்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களுக்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறை உதவி இயக்குநர் கோ. சுரேஷ்ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2019, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுத அரசுத் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள், தற்போது சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.இதற்காக, அந்தந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத்துறை சேவை மையத்திற்கு ஜன.21,22 தேதிகளில் நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் வகையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை காணலாம்.