அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த அங்கனூர் கிராமத்தில் கண்காணிப்பு கேமராவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் புதன்கிழமை இயக்கி தொடங்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் முதல்முறையாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவியோடு செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது. இதனை தொடக்க விழா அங்கனூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு புதிய கண்காணிப்பு கேமராக்களை இயக்கி தொடங்கி வைத்தார்.