டிஎன்பிஎஸ் குரூப் 1 முதனிலைத் தேர்வுக்கான முன்னோடி இலவச பயிற்சி வகுப்புகள் ஜன. 23 முதல் அரியலூர், மாவட்ட வேலைவாய்ப்பக தன்னார்வப் பயிலும் வட்டத்தில் தொடங்குகிறது.
பயிற்சியில் சேர விரும்பும் பட்டதாரி இளைஞர்கள், பெண்கள்; 21.01.2019 முதல் தங்களது பட்டதாரி கல்விச் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு பதிவட்டை, சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் அலுவலக வேலை நாள்களில் நேரில் வந்து முன்பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்கலாம்.
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பக தன்னார்வப் பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரசுப் பணி பெற்று பயனடைந்துள்ளனர். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி தெரிவித்தார்.