அரியலூர் மாவட்டம், வெங்கனூர் அருகே தேள் கொட்டி சிகிச்சை பெற்று வந்த சிறுவன் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கொரத்தாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசன் மகன் விஜயராகவன்(13). இவர், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை அங்குள்ள நீர் தேக்கத் தொட்டிக்கு குளிக்கச் சென்ற அவரை, தேள் கொட்டியது.
இதையறிந்த அவரது பெற்றோர் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜயராகவன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். இதுகுறித்து வெங்கனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.