அரியலூர் மாவட்டம் அமீனாபாத், அன்னிமங்கலம், பருக்கல் (மே), ஜயங்கொண்டம், இரும்புலிக்குறிச்சி, ஆத்துக்குறிச்சி ஆகிய 6 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.
முகாமில், வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடி தீர்வு வழங்கப்படும். எனவே, இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி தெரிவித்தார்.