மக்களவைத் தேர்தல் நட த்தை விதிகள் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வந்ததன் காரணமாக, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவில்லை.
இதுகுறித்து தெரியாமல் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த மனுவை, அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டுச் சென்றனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமல் காலம் முடிவடையும் வரை, தற்காலிக ஏற்பாடாக இந்தப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.