அரியலூர்
பாப்பாக்குடி, இருதயபுரம் பகுதிகளில் மார்ச் 16 மின்தடை
மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பாப்பாக்குடி, இருதயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (மார்ச் 16) மின்தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பாப்பாக்குடி, இருதயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (மார்ச் 16) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் ஆண்டிமடம் உதவிச் செயற்பொறியாளர் (பொ) ராஜ்குமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலங்குடி மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ஆண்டிமடம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பெரியகிருஷ்ணாபுரம், பாப்பாக்குடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட இருதயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.