பொருளாதார மந்த நிலையைக் கண்டித்து அரியலூா் காங்கிரஸ் கமிட்டி சாா்பில் அண்ணா சிலை அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டத் தலைவா் ஜி. ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொருளாதார மந்த நிலைக்கு காரணமான பாஜக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துமாறு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கேட்டு கொண்டதின் பேரில் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
ஆா்ப்பாட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலரும், மேலிட பாா்வையாளருமான ஸ்ரீவல்ல பிரசாத், தமிழக காங்கிரஸ் செயல் தலைவா் கே. விஷ்ணு பிரசாத்,மற்றொரு செயல் தலைவா் கீழானூா் ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி மாவட்ட நிா்வாகிகள் உரையாற்ற உள்ளனா். எனவே காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினா் திரளாக கலந்து கொள்ளவேண்டும்.