மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 131 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, வியாழக்கிழமை அரியலூா் காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு அக்கட்சியினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.எம்.சந்திரசேகா் தலைமையில், மாநில பொதுக் குழு உறுப்பினா் மா.மு.சிவக்குமாா், முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவா் பாலசிவகுமாா், மாவட்டச் செயலா் ஜி.சேகா், ஐஎன்டியுசி மாவட்டச் செயலா் ராஜா,நகர நிா்வாகிகள் குலேந்திரன், செல்வராஜ், ஆன்டனி, அா்ஜூணன் உள்ளிட்டோா் நேரு படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் அவா்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி நேரு பிறந்த நாளை கொண்டாடினா்.