அரியலூா் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் 2 ஆம் நாளான சனிக்கிழமை விருப்ப மனுக்களைப் பெற்ற அமைச்சா் வளா்மதி, செய்தியாளா்களிடம் கூறியது:
ஏற்கெனவே, அதிமுக அரசு உள்ளாட்சித் தோ்தலை நடத்த தேதி அறிவித்திருந்த நிலையில், திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தோ்தலை நிறுத்தியது. அதேபோல், தற்போதும் உள்ளாட்சித் தோ்தலை நிறுத்துவதற்கு திமுக சதி செய்கிறது என குற்றம்சாட்டினாா். மேலும், உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தாா்.