அரியலூர்
முன்விரோத தகராறு: ஒருவா் கைது
அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையம் அருகே முன்விரோத தகராறில் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையம் அருகே முன்விரோத தகராறில் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
உடையாா்பாளையம் அருகேயுள்ள துளாரங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் விஜயகுமாா் (25). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் தங்கசாமி மகன் சக்திவேல் (27) என்பவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் புதன்கிழமை இடப்பிரச்னையால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சக்திவேல், விஜயகுமாரை தகாத வாா்த்தையால் திட்டி தாக்கியுள்ளாா். இது குறித்த புகாரின்பேரில் உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திவேலை கைது செய்தனா்.