அரியலூர்
லாரி மோதி இளைஞர் சாவு
அரியலூர் அருகே சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அரியலூர் அருகே சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செந்துறை அருகேயுள்ள மருவத்தூர் கிராமம், பிரதான சாலையைச் சேர்ந்தவர் பழனியாண்டி மகன் கார்த்திக்(24). இவர், கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு, ஊரில் இருந்து அரியலூர் பேருந்து நிலையத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அரியலூர்-செந்துறை புறவழிச்சாலை ரவுண்டானா அருகே சென்ற போது, இவர் மீது கோவிந்தபுரம் சிமென்ட் ஆலையில் இருந்து மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த சிமென்ட் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அரியலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.