செந்துறை அருகே பொய்யாத நல்லூர் கிராமத்திலுள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வரி கோயிலில் புராட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு மிளாகய் சண்டியாக பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் உள்ள ஸ்ரீ மகா ப்ரத்தியங்கார தேவிக்கு மாதாந்தோறும் அமாவாசை தினத்தை முன்னிட்டு மிளகாய் சண்டியாகம் பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி சனிக்கிழமை நடைபெற்ற சண்டியாகத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி, சாமி தரிசனம் செய்தனர்.