அரியலூர் மாவட்டம், திருமானூர் மாரியம்மன் கோயில் பால்குடத் திருவிழாவுக்கு முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திருமானூர் கொள்ளிட கரையின் வடபுறம் பேருந்து நிலையம் அருகிலுள்ள மாரியம்மன் கோயிலில் நிகழாண்டு பால்குட திருவிழா ஏப்.7-ல் நடைபெறுவதை முன்னிட்டு கோயிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் அறங்காவலர் முருகானந்தம், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் வீரன், இந்துசமய அறநிலையத் துறையின் ஜெயபால், கோயில் அர்ச்சகர் கரும்பாயிரம் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.