அரியலூர்
தேர்தல் பணி: முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு...
வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பாதுகாப்புப் பணியில் காவல் துறையுடன் இணைந்து பணிபுரிய
வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பாதுகாப்புப் பணியில் காவல் துறையுடன் இணைந்து பணிபுரிய முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே, தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதுவரை விருப்பம் தெரிவிக்காத முன்னாள் படைவீரர்களும் தங்களது அடையாள அட்டையுடன் தேர்தல் பாதுகாப்புப் பணிபுரிய ஏதுவாக, அரியலூர் மாவட்ட அண்ணா விளையாட்டரங்கில் ஏப்.16 அன்று காலை 9 மணிக்கு ஆஜராக வேண்டும். மேலும், விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை 04329-221011 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தேர்தல் அலுவலரும்,அரியலூர் மாவட்ட ஆட்சியருமான மு.விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.