மக்களவைத் தேர்தலில் வெளி மாவட்டங்களில் பணியாற்ற உள்ள அரியலூர் மாவட்ட போலீஸார் தங்களது தபால் வாக்குகளை திங்கள்கிழமை பதிவு செய்தனர்.
வெளி மாவட்டங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ள காவல் துறையினர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்யும் வகையில், அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதில் வெளிமாவட்டங்களில் பணியாற்றவுள்ள 38 பேர் தங்களது தபால் வாக்குகளை திங்கள்கிழமை அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்தனர். காவலர்கள் தங்களது தபால் வாக்குகளைப் பதிவு செய்வதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.