நாடக அரசியல் நடத்தி மக்களை ஏமாற்றுகிறார் ராமதாஸ்: திருமாவளவன் குற்றச்சாட்டு

நாடக அரசியல் மூலமாக மக்களை ஏமாற்றி வருகிறார் ராமதாஸ் என குற்றஞ்சாட்டியுள்ளார் திருமாவளவன்.

நாடக அரசியல் மூலமாக மக்களை ஏமாற்றி வருகிறார் ராமதாஸ் என குற்றஞ்சாட்டியுள்ளார் திருமாவளவன்.
சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் ஜயங்கொண்டம் பகுதியில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்தது: 
அதிமுக, பாஜக தலைமையில் அமைந்த கூட்டணி பொருந்தா கூட்டணி, கொள்கையில்லாத, கோட்பாடு இல்லாத, முரண்பாடுகள் நிறைந்த, பேரத்தின் அடிப்படையில் அமைந்த கூட்டணி. சேலத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், 8 வழிச்சாலை திட்டத்தை மக்களின் ஒப்புதலோடு நிறைவேற்றுவோம் என்று கூறுகிறார். ஆனால் அந்த மேடையில் இருந்த ராமதாஸ் அமைதியாகத்தான் இருந்தார். அவர் ஒரு நாடக அரசியலை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது. ஆனால் மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. எனக்கெதிராக சாதி, மதம், வன்முறை ஆகியவற்றை துருப்புச்சீட்டாக எதிராளிகள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த தேர்தலை அமைதியாக நடத்த காவல் துறையினர் விழிப்பாக இருந்து அமைதியை நிலைநாட்ட வேண்டும். ஜயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி திட்டம் தொடர்பாக 13 கிராம மக்கள், நடத்தி வரும் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு எனக்கு வாக்களியுங்கள். 
நான் வெற்றி பெற்ற பிறகு கண்டிப்பாக இந்தத் திட்டம் குறிந்து ஆராய்ந்து தீர்வைக் காண்பேன். தற்போது இந்தப் போராட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மக்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக தீர்வை காண வேண்டும் எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com